ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த புரோ கபடி சீசன் 8 தொடங்குவதற்கான தேதியையும், இடத்தையும் புரோ கபடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Image: Pro Kabaddi Official |
புரோ கபடி நிர்வாகம் அறிவித்துள்ளது செய்தியின்படி, டிசம்பர் மாதம் 22ஆம் தேதி பெங்களூருவில் இந்தப் போட்டியானது தொடங்கி நடைபெற இருக்கிறது,மற்றும் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் நடத்துவது என்ற முடிவையும் நிர்வாகம் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
புரோ கபடி சீசன் 8 நிர்வாக கமிஷனர் திரு.அனுபம் கோஸ்வாமி வெளியிட்டுள்ள செய்தியில்,பெங்களூருவில் உள்ள வசதிகளையும் மற்றும் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுதற்கான காரணத்தையும் விளக்கி உள்ளார்.
மஷால் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுவும், அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டு , லீக் காலம் முழுவதும் பாதுகாப்பிற்க்காக தேவையான சுகாதாரத்தைப் பராமரிக்க சிறப்பு ஏஜென்சிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. சீசன் முழுவதும் ஒரு உயிரியக்க பாதுகாப்பு குமிழ்(A biological safety bulb) பராமரிக்கப்பட்டு மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சோதனை மேற்கொள்ளப்படும்.
உலகெங்கிலும் உள்ள தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து, தொடர் விளையாட்டு நடத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கணக்கிட்டு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படும். இதன் பொருள் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் வசதியாக இருந்து தங்களுக்குப் பிடித்த அணிகளை ஆதரிக்கலாம்.
இந்தப் போட்டியை நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் விஐபி பேக் ஆக்டிவேட் செய்திருந்தால் பார்த்து மகிழலாம்.
Tag: Pro Kabaddi News Tamil | Pro Kabaddi Season 8 starts December at Bengaluru |
0 கருத்துகள்